Wednesday, December 6, 2017

குருவே போதும் !




இறைவனை விட எனக்கு
குருவையே பிடிக்கும்

முகம் தெரியாத ஓவியன்
எனக்கு இறைவன் என்றால்
முகம் தெரிந்த
மருத்துவன் குருவே எனக்கு

வாழ்வின் எது கிடைக்குமோ
அதை அனுபவி என்பான் இறைவன்
வாழ்வையே அனுபவி
என்கிறார் என் குரு

காமத்தில், காதலில்
தடுமறிய போதெல்லாம்
பாவம் என்றது இறைவன் 

சிந்தனை தோள்கொடுத்து
தாங்கியவரே குருவானவர்

இறைவனை அறியாமல்
திசைமாறிய பயணத்தில்
சென்றதெல்லாம் தெரியாத ஊர்கள்
தெரியாத திசையில் கூட
வாழச்கொல்லி தந்தது
குருவின் ஆசியே

இறைவன்
வாழக்கற்று கொடுக்கிறார்
குருவோ
வாழ்வையே கற்றுக்கொடுக்கிறார்.

என் தாய்
தந்தையை இவரெனெ காட்டினாள்
தந்தை குருவை காட்டினார்
குருதான் இறைவனை காட்டினார்
ஆனால்
புரியாத இறைவன் என்ற உயிரைவிட
புரிந்த குருவென்ற உருவம் போது எனக்கு

பிறவிப் பெருங்கடலில்
கடவுள் தோணியாக இருக்கிறார்
குருவோ துடுப்பாக இருக்கிறார்
எனக்கு
துடுப்பே பிடிக்கிறது .

இறைவன் கிணறு என்றால்
அதில் இறைக்கும் வாளி குருவே

அவரே எனக்கு போதும்  

1 comment:

  1. குருவே சரணம்!

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete