Friday, December 1, 2017

அப்பாக்களும் பாவம்தான் !






ஒரு வீட்டில்,
அம்மாவின் ஆயிரம் துன்பங்ளுக்கும்
அப்பாவே காரணம் என்பார்கள் .

படிக்காத பிள்ளையென்றால்
அப்பன் புத்தி என்பதாய்
அனாயசமாய் புகார் வாசிப்பார்கள்

வீட்டின் வறுமைக்கு
விசேச காரணமாயும்
அப்பாவே பலியாடாய் நிற்க வேண்டும்.


அலுவலகத்தில் ,
சமூகத்தில் ,
பெற்ற வீட்டில்,
உறவின் முன்,
நண்பர்களிடத்தில்,


இப்படி
அப்பாவுக்கு ஆயிரம்
முகங்கள் உண்டு
ஆனால் ,

அவருக்கு
ஒரே ஒரு மனசுதான் இருக்கிறதே
என்றாவது அதற்கும்
வலிக்கும் என்று
யாராவது நினைத்ததுண்டா ?





1 comment:

  1. வாவ்... நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete