Monday, September 12, 2016

பிரம்மகிரியின் புதல்வி .



பாவத்தை தொலைக்க 
நதிக்கு போகிறோம் 
இங்கே ஒரு நதியே 
பாவியாக்கப் படுகிறது !

கடந்து வரும் பாதை 
கர்நாடகம் என்பது தவறா ?

பெண் பெயர் வைத்ததால்
பொத்தி வைத்துக் கொள்ள
பொன்னி நதி புஷ்பம் அல்ல
புயலின் மிச்சம் அவள்!

அணைக்குள் கட்டிப்போடுவதால்
அவள் அடங்கிப் போகும்
பேரிளம் பெண்ணல்ல
பிரம்மகிரியின் புதல்வி.

எத்தனை நாள் மௌனம் காப்பாள் ?

 பதில் சொல்ல காத்து இருக்கிறாள்
பருவ மழை மூலம்...

No comments:

Post a Comment