Saturday, July 12, 2014

என் அம்மாவின் மரணம்




அம்மா என்ற 
என் ஒற்றை சொல்
 முகவரி தொலைந்து விட்டது ! 

அம்மா இல்லாத வீடு 
நிலவு தொலைந்த 
வானம் போல 
இருண்டு கிடக்கிறது  !

 சொந்த ஊரில் 
அனாதை போல  சோர்ந்து 
கிடக்கிறோம் நாங்கள் !

அம்மா எங்கு இருக்கிறாய் 
யார் அழைத்தார்கள் 
ஏன் போனாய் ?

பூமி சலித்து விட்டதா 
புதல்வர்கள் வெறுத்து விட்டதா
புண்ணியம் பழுத்து விட்டதா?

கேட்கிறார்கள் பலர்,
அம்மா தவறிவிட்டார்களா ?
எப்படி சொல்வது  ?
அம்மாவிடம் தவறிய 
அனாதைகள் நாங்கள் என்று !


வா என்றும் அழைக்கும்
குரல் வீட்டில் இல்லை 
பொட்டு வைத்த
 அம்மாவின் ஃபோட்டோ
மட்டும்தான்  சிரிக்கிறது !


வலிக்கிறது .
வாழும்போது உங்களுக்கு  
கொடுத்த சுமைகளை ,
மன்னிக்க சொல்லி கேட்க்க 
யாரை தேடுவேன் பூமியில் இனி .?

உரக்க கத்துகிறது மனம் 
இரக்கம் இல்லாத இறைவா 
மரணத்தின் பயணம் ஓயாதா ?







2 comments:

  1. வணக்கம்
    அம்மாவுக்கு வடித்த இரங்கல்ப்பா. அம்மாவின் நினைவை தித்திக்கிறது... அம்மாவின் ஆண்மா சாத்தியடைய இறைவனைப்பிராத்திக்கிறேன்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. எல்லோரும் இதே போன்ற வலிகளை காலம் கடந்து தான் சுமக்கின்றோம்.

    ReplyDelete