Thursday, November 30, 2017

யாரென்று தெரியவில்லை





என்னை உங்கள் யாருக்கும் 
பிடிக்க மாட்டேன்கிறது !

முன்னே சிரிக்கிறீர்கள் 
பின்னே குத்துகிறீர்கள்

வலிய வந்து உதவினால்
உள்நோக்கம் என்கிறீர்கள் ! 

ஒதுங்கி நின்றால்
இதயமற்றவன் என்று ஏசுகிறீர்கள் !

உங்களிருந்து விலக முடியவில்லை 
உங்களில் யார் நான் என்றும்
தெரியவில்லை !

நீங்களும் என்னைப்போலவே 
யாரென்று தெரியாமல் இருப்பதால் !


2 comments: