Wednesday, September 24, 2014

அழகு + ஆபத்து = வாழ்கை .




ஓடி கொண்டு இருக்கும்போது

ஒன்றும் தெரிவதில்லை


தேடி கொண்டு இருக்கும் போதும்

தீரவில்லை வாழ்கை


திரும்பி பார்க்கும்போது மட்டும்

தள்ளாடுகிறது அடுத்த அடி !




தொலைவில் நின்று வாழ்வை

ரசித்தவன் துக்கப்படுவதில்லை


தொலைந்து போன வாழ்வை

தேடியவன் சந்தோசப்படவில்லை


மனிதன் படைப்பு இறுதி

செய்யப் பட்டதுதான் –ஆனால்


உறுதி செய்யப்படாத

ஒருவித பரிணாம விபத்து .1



ஆபத்தை ரசிப்பவன்

வாழ்வை நேசிக்கிறான் 1


ஆசையை ருசிப்பவன்

வழுக்கிகொண்டே போகிறான் .!



அன்பையும் ,கருணையையும்

உடலாயும் , உயிராயும் கொண்டவன்,


கடவுளின் காவலில் சாவகாசமாக

கதை படித்து கொண்டிருக்கிறான் !..



1 comment:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete