Saturday, December 2, 2017

மிச்ச வாசனை ...



நாம் எங்கோ பிறந்தோம்
இங்கு ஏன் பார்த்தோம்
காலத்தின் கறுப்புத்தினங்களா அவை  ?

நாம் சந்தித்த  காலங்கள்
கை மணல் போல
சறுக்கி சரிவதற்குள் ..

பிரிவின் அறுவடை
பிரிந்து போன காட்டாறாய்
தடம் இழந்து மடம் மாறியது

நாம் கூடியிருந்த  போது
தணியாத அகம்பாவச் சேறு
பிரிந்து தவித்த போது  அழுதது..

காலம் என்ற காற்று அடித்து
பறித்தது போக உன் நினைவின் மிச்ச
வாசனை வரும்போதெல்லாம்..

நான் கடவுளைக் கேட்பேன்
ஏன் என்னைப் படைத்தாய்
எனக்குள் மனதை விதைத்தாய் என்று ?

எவனுக்காகவோ  வயிற்றிலும்,
உன்னையோ மனசிலும்
ஏன் சுமக்கிறேன் என்று ..

1 comment: