Monday, September 14, 2015

காதல் விதவை
















தொலைந்துப் போன குழந்தைக்கு 
தாய்க் குரல் போல 

இத்தனை வருடங்கள் 
நம் நினைவுகளைக் காலம் 
கழுவிக் காய வைத்தும் 

பாடம் சொல்லிதரும் போது 
மகளின் பேச்சில் 
அவன் வகுப்புத் தோழனின் பெயர் 
உன் பெயராக இருந்த போது 

என்னை மீறிய 
என் சிலிர்ப்புகளை 
தவற விட்ட 
மகளின் பாடப்புத்தகம் 
காட்டிக் கொடுத்தது 

தடுமாறிய என் செயலை 
மகள் கவனித்தாலும் 
வாழ்க்கை என்பது 
பணத்தின் கோட்டை அல்ல 
அது வெறும் வாசற்படிதான் 
என்று என் வாழ்க்கை 
பாடத்தில் தோற்றுபோனதை 
எப்படிப் புரிய வைக்க முடியும் ? 

காதல் என்பது 
அன்பு மட்டுமே 
என்பதைக் காலம் புரிய வைக்கும் போது 
வாலிபம் என்பது 
மேற்குச் சூரியனாய் 
கரைந்துப் போகிறதே 
என்ன செய்ய ? 

வாழ்க்கையைக் காதலித்தாலும் 
என்னைக் காதலித்த 
காதலை மறுத்த 
நானும் ஒரு காதல் விதவைதான்

No comments:

Post a Comment