Tuesday, June 16, 2015

இன்னும் 23 குரோமோசோம் .




உடலுக்குள்ளா மனசுக்குள்ளா
என பிரித்து சொல்ல முடியவில்லை
ஆனால்
எப்போதும் ஒரு பெண் எனக்குள்
உறங்குகிறாள் ,விழிக்கிறாள்
அன்றாட செயல் புரிகிறாள்

ஆனால் அவள்
என்னோடு எதுவும் பேசுவதில்லை

அவள் சிரிக்கும் நேரமும்
என் தாய் சிரிக்கும் நேரமும்
ஒன்றாக பயனிக்கிறது

அவள் அழும் நேரமும்
என் மனைவி அழும் நேரமும்
ஒன்றாக ஒலிக்கிறது

அவள் சந்தோசமாக
பார்க்கும் நேரமெல்லாம்
நான் விழித்தெழும் போதுதான்

முறைத்துப் பார்க்கும் நேரமெல்லாம்
நான் தூங்க போகும்
நேரமாக மட்டுமே இருக்கிறது .

எப்போது அவள்
என்னை விட்டு விலகுகிறாள்
எப்போது எனக்குள்
புகுந்து வசிக்கிறாள்
எனபது மட்டும்
ஏனோ தெரியவில்லை !


No comments:

Post a Comment