Sunday, September 20, 2015

நீரில் தொலைந்த நிலவு !





அக்னி சிறகுகள் சொன்ன 
அற்புதக் கனவை 
புரிந்து கொள்ளாத மனது ,

ஆழ் மனதின் நிறைவேறாத
ஆசைச் சிந்தனைகள்தான் கனவென்று 
சிக்மண்ட் ஃப்ராய்டு படித்தும் 
புரியாத சிந்தனை,  

உறங்கும் போது பிரசவிக்கும் 
எண்ணங்களின் கசிவே 
கனவு என ஆன்மீகம் சொல்லியும் 
புரியாத அறிவு, 

என்னை பிரிந்த உன்னை,
எங்கிருந்தாலும் வாழ்க எனும்
என் ஆழ்மனம் வாழ்த்தும் போதுதான்
அதன் அர்த்தம் முழுதாய்  புரிந்தது .

கனவென்பது உடல் உறங்கும் போதும் 
விழித்து இருக்கும் ஆழ் மனம் விரும்பும்
அழுத்தமான கொள்கை என்பதாக !

என்ன செய்ய ?
ஜென் சொல்வது போல
ஞானம், சில பேருக்கு 
போதி மரத்தடியில்,  
பல பேருக்கு 
நீரில் தொலைந்த நிலவில் !

No comments:

Post a Comment