Thursday, April 7, 2016

நல்ல சமாரியன் (The Good Samaritan)




தூரிகைகள் காட்டும் 
நொடிப்பொழுதுக் காட்சியில் 
எத்தனை எத்தனை
உள் மன வெளிப்பாடு 
உயிரைப் பிய்த்து 
மனதின் காட்சியாய் 
மிரள வைக்கிறது ?


குற்றுயிராய் சுமக்கப்படும் 
இந்த மனிதன் யார் ?
அந்த முகம் ...அந்த முகம் ...
இந்தப் பிரபஞ்சத்தின் 
வெளிச்சக் கீற்றுக்களின் 
வேர்களுக்கு நீருற்றுக்கிறது !


கைகளில் ஆணித்துளை
நெற்றியில் முள் முடித்தடம் ,
இவர் மீண்டும் உயிர்தெழுந்த ..
மீட்டு வரப்படும் பேராத்மாவா ?


வரைந்தவன் இங்கு தெரியவில்லை 
வரைந்தது  சொல்ல அழைக்கிறது, 
வானுலகின் மைந்தன் 
வந்து விட்டானென்று ! 



No comments:

Post a Comment