Monday, September 8, 2014

குருட்டு ஓவியனாய்


உள்ளிருக்கும் ஓயாத 
அலை மனதை 
அளக்க கருவியில்லா 
என் மக்கா 

வெகு தூர கோள்களுக்குள் 
எதை வைத்தாய் 
தேடி சுமக்க ?

கல்லும் நீரும் 
சூடும் காற்றும் 
சொல்லும் கதையறியா
குருட்டு விஞ்ஞானமே

கட்டிய கோவணத்துடன் 
சுற்றிய என் சித்தன் 
விட்டு சென்ற மெய்ஞானத்தை
என்று உணர்வாய் ?

வெளியே ஓடி ஓடி 
ஓயந்தாலும் உள்ளுக்குள்
புதைந்து கிடக்கும் 
’வெளியை’ புரியாத  

உன் விஞ்ஞானம் 
குருட்டு ஓவியனாய் 
கொட்டிய வண்ணமெல்லாம்
ஓவியம் என்பான் 

இருட்டும் ஏகமும் 
என் சொத்தென்றானே
அவன் ஓலைகளை 
இனியாவது புரட்டு

அங்கே உன் நுண்ணோக்கியின்
சாதனைகள் வெறும் குப்பைகள் தான் என  
முன்னோக்கியே அவன் பார்த்தை
அறிவாயே என் மக்கா என் மக்கா !

No comments:

Post a Comment