Saturday, May 10, 2014

நீ இல்லாத அகம் ...




விழித்தவுடன் தேடும் 
பக்கத்து படுக்கையும்..

விழிக்க வைக்கும் 
உன் கொலுசு சத்தமும் ..

காத்து இருக்கும்
காலை டீயும்,உணவும் ..


எப்போது வருவீங்க 
என்ற ஏக்க குரலும்.. 

மறக்க நினைத்தாலும் 
துரத்துகின்றன.

மெல்ல கொடியில் - உன் 
அசையும் துணிகளும் ..

கோளம் தொலைந்த 
வாசல்களும் ..

பூட்டி செல்லும் கதவுகளும் 
திறந்து வைக்கின்றன..

உன் நினைவுகளின் 
வாசனையை .. 

இன்னும் எத்தனை காலம் 
வலிகளோடு காத்து இருப்பது ?

No comments:

Post a Comment