Tuesday, February 9, 2016

எழுதாத பக்கங்கள் !



தூசு தட்டிப் பார்த்து 
பழைய நாட்குறிப்பின் 
எழுதப்படாத பக்கங்களை 
புரட்டிய பையன் கேட்டான் 

எழுது கோளை 
தொலைத்து விட்டீர்களா? 

ஆமாம் . 
பொய்யுரைத்தேன் . 

பென்சிலும் தொலந்து விட்டதா? 
மறுபடியும் கேள்வி முளைத்தது 

இருந்தது. 
ஆனால் எழுதவில்லை . 

மறுபடி அவன் கேட்பதற்குள் 
நானே சொன்னேன் 

தலையெழுத்தை 
புரிந்து கொள்ளாத காலம் அது 
என்றேன் . 

புரியவில்லை அப்பா .
 
இது போல 
உன் குழந்தையும் கேட்க்கும் 
அப்போது உனக்கு புரியும் என்றேன் . 

அவன் நாட்குறிப்பை மூடிவைத்தான். 

நான் அன்று எழுதாத 
பக்கங்களின் நினைவுகளில் 
புதைந்து போனேன் ...

2 comments:

  1. வணக்கம்

    மனதை நெருடும் வரிகள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete